|
இலக்கியன்
|
 |
« Reply #40 on: February 12, 2012, 09:16:48 AM » |
|
பாடல்: ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா திரைப்படம்: ராணி சம்யுக்தா பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் ஆண்டு: 1962
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய் நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய் ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும் மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும் வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ ஓ மன்னவா ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ ஓ வெண்ணிலா
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #41 on: February 12, 2012, 09:17:54 AM » |
|
டம்: காதல் தேசம் இசை: AR ரஹ்மான் பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ.. ஓ நண்பனே அறியாமலா நான்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தால் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா.....)
மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா.....)
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா.....)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #42 on: February 12, 2012, 09:21:38 AM » |
|
படம்: காக்கி சட்டை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி வரிகள்: வைரமுத்து
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா? மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா? ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே (வானிலே..)
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன் வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன் மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா? காமன் தேசம் போகும் தேரில் ஆடவா? ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே வானம் தாலாட்டுதே வா நாளும் மார் மீதிலே ஆடும் பூவை தோளில் யார் சூடுவார் தேவனே மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே தேவனே சூடுவான் (வானிலே..)
பூவை போல தேகம் மாறும் தேவதை பார்வை போதும் மேடை மேலே ஆடுதே பாதி கண்கள் மூடும் காதல் தேவியே மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன் மாலை பூங்காற்றிலே நான் ஆடும் பொன் மேகமே ஓடும் வானம் காதலின் ஆலயம் ஆனதே கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம் கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம் ஓவியம் தீட்டுதே (வானிலே..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #43 on: February 13, 2012, 08:21:54 AM » |
|
படம்: நிலவே மலரே இசை: M.S. விஸ்வநாதன் பாடியவர்: P.சுசீலா
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே [மண்ணில் வந்த...]
அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே
எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டு தொட்டு நீராட்டும் [எட்டி நிற்கும்...]
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு [நிலவே மலரே...] [மண்ணில் வந்த...]
புன்னை இலை போலும் சின்ன மணி பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் முன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது [புன்னை இலை...]
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீ தான் தந்தாயோ மணிக் குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ [நிலவே மலரே...] [மண்ணில் வந்த...]
நிலவே... மலரே...
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #44 on: February 13, 2012, 08:23:26 AM » |
|
படம்: அரங்கேற்ற வேளை இசை: இளையராஜா பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
(ஆகாய வெண்ணிலாவே)
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
(ஆகாய வெண்ணிலாவே)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #45 on: February 14, 2012, 08:16:32 AM » |
|
திரைப்படம் :கோகுலத்தில் சீதை பாடியவர் : சித்ரா இசை: தேவா
அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளியேற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே
நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா -[நிலாவே](3)
மலரே உன் வாசம் அழகே மழையே உன் சாரல் அழகே நதியே உன் தேகம் அழகே கடலே உன் நீலம் அழகே
பனியே உன் காலம் அழகே பகலே உன் காலை அழகே இரவே உன் மாலை அழகே உலகே என் தேசம் அழகே கவிதை அழகே கலைகள் அழகே மழலை அழகே - மறந்தாயே மனிதா மனிதா வாழ்க்கை முழுதும் அழகை அருகில் காண்பாயே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே இது உண்மையேஏஏ
(நிலாவே) -2
முகமே உன் கண்கள் அழகே விழியே உன் பார்வை அழகே இதழே உன் பேச்சு அழகே மொழியே உன் வார்த்தை அழகே
மனமே உன் எண்ணம் அழகே நினைவே உன் நேர்மை அழகே உயிரே உன் மூச்சும் அழகே மனிதா உன் தேகம் அழகே சிரிப்பும் அழகே அழுகை அழகே மனிதா வாழ்க்கை இதுதானே தண்ணீர் விட்டு பாலை அருந்தும் அன்னப்பறவை நீதானே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே மதி வெல்லுமேஏஏ
நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா - 2
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #46 on: February 14, 2012, 08:23:07 AM » |
|
படம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்
வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே) இதயம் என்ன புத்தகமா படித்து விட்டு தந்து விட காதல் என்ன கட்டிடமா இடித்து அதை கட்டி விட (வெண்ணிலவே)
பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா? பேசு ஒரு வார்த்தை நீ கல்லா? மரமா? அன்பே உன் கையில் நான் விரலா? நகமா? நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா? இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே நீ ஆணாய் பிறந்து வருவாய் உன் போலே பெண்ணை நீ அப்போது நேசித்தால் என் நெஞ்சின் வேதனை அறிவாய் உலகத்தின் முடிவை எழுதியவன் அவனே எனக்கு ஒரு முடிவை ஏன் இன்னும் சொல்ல வில்லை ஏன் இன்னும் சொல்ல வில்லை அவன் ஊமை இல்லை இல்லை.. (வெண்ணிலவே)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #47 on: February 14, 2012, 02:54:27 PM » |
|
திரைப்படம் : வானத்தைப்போல பாடியவர் :ஹரிஹரன் இசை: SA ராஜ்குமார், பாடல் : பா.விஜய்
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்
[காதல் வெண்ணிலா]
வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
[காதல் வெண்ணிலா]
ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறமெடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
[காதல் வெண்ணிலா]
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #48 on: February 14, 2012, 02:55:59 PM » |
|
படம்: உனக்காக எல்லாம் உனக்காக இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: ஹரிஹரன்
வெண்ணிலா வெளியே வருவாயா விழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா அருகிலே அணைக்க வருவாயா பாலொளி குடிக்க தருவாயா தாகத்தில் தவிக்க விடுவாயா ஹே நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்துவிடு உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்றுவிடு (வெண்ணிலா..)
ஹே புரண்டு நீ படுக்கும் போது உதிர்ந்திடும் கூந்தல் பூவில் என் காதல் வாசம் இருக்கும் .. நீ பாரம்மா அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே.. உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான் விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான் ஒஹோ ஹோ .. (வெண்ணிலா..)
ம்ம் .. கண்களை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா .. என் அன்பே.. என் அன்பே.. என் அன்பே.. ஹே ஹே.. காதலி காதலி கனவுகள் தோன்றாதே கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஒஹோ ஹோ.. (வெண்ணிலா..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #49 on: February 14, 2012, 02:59:39 PM » |
|
படம்: டூயட் (1994) இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடல் வரி: வைரமுத்து பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!
மானமுள்ள ஊமைபோல நானும் கேட்க கூசி நின்றேனே!
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன் அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன் வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே.... அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே.... நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன் அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன். வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!
காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன் அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன் கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன் இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன் அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது.
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #50 on: February 15, 2012, 08:24:12 AM » |
|
உதய கீதம் இளையராஜா பாடல்: பாடு நிலாவே தேன் கவிதை குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்
(பாடு நிலாவே)
நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமலே போகுமோ கைதான பொதும் கை சேரவேண்டும் உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறுமே
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்
(பாடு நிலாவே)
ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு சேரும் என் மேகங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் காவேரி வெள்ளம் கை சேர வேண்டும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே
(பாடு நிலாவே)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #51 on: February 15, 2012, 08:26:48 AM » |
|
பாடல் தலைப்பு நிலவே முகம் காட்டு திரைப்படம் எஜமான் கதாநாயகன் ரஜினிகாந்த் கதாநாயகி மீனா பாடகர்கள் பாடகிகள் S.ஜானகி இசையமைப்பாளர் இளையராஜா பாடலாசிரியர்கள் வாலி இயக்குநர் ஆர்.வி.உதய குமார் வெளியானஆண்டு 1993
ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு இளம் பூங்கொடியே இது தாய் மடியே
பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு அணைத்தேன் உனையே இது தாய் மடியே
ஆண் : நிலவே முகம் காட்டு
(இசை) சரணம் - 1
பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா
ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா நான் உன் பிள்ளை தானம்மா
பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா இனி உன் துணை நானய்யா
ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போலே துணையும் இல்லையே இனி நீ என் தோளில் பிள்ளையே
ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே
(இசை) சரணம் - 2
ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே இமை நீரும் கண்ணின் நீரென்றால் தினம் குடிப்பவன் நானே
பெண் : மாலையோடு நடக்கும் தேரைய்யா நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா உன்னை மீற யாரைய்யா
ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே நீ என் வாழ்வின் எல்லையே
பெண் : இதை மீறிய தவம் இல்லையே இனி எந்தக் குறையுமில்லையே தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #52 on: February 15, 2012, 08:31:00 AM » |
|
படம் : ஜானி பாடல் : கண்ணதாசன் இசை : இளையராஜா பாடியவர் : ஜென்சி வெளியான ஆண்டு : 1980
என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்.... என் வானிலே ஒரே வெண்ணிலா
நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்த்தைகள் தேவையா ஆஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா ஆஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #53 on: February 15, 2012, 08:32:02 AM » |
|
படம் : தம்பி பாடல்: வைரமுத்து பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி இசை: வித்யாசாகர்
பெ: அ அ ஆ அ அ ஆஆஆ ஆ: அ அ ஆ அ அ ஆ ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்) பெ: காதலித்துப் பார்... காதலித்துப் பார்..
சரணம் - 1 ---------------- ஆ: இமையடித்தாலும் இதயம் வலிக்கும் வலிகளில் கூட வாசனை இருக்கும் குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்.. பெ: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும் நதியிருந்தாலும் நாவே உலரும் ஆ: தப்பு எல்லாம் கணிதமாகும் தவறு எல்லாம் புனிதமாகும் பெ: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும் எச்சில் பண்டம் அமிர்தமாகும் ஆ: நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்
பெ: சுடும் நிலவு சுடாத சூரியன்.
சரணம் - 2 ----------------- பெ: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும் சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும் குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்.. ஆ: சத்தியக் காதல் என்னமும் செய்யும் சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும் பெ: தொட்ட பாகம் மோட்சமாகும் மற்ற பாகம் காய்ச்சலாகும் ஆ: தெய்வம் தூங்கி மிருகமாகும் மிருகம் தூங்கி தெய்வமாகும் பெ: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்
ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #54 on: February 15, 2012, 08:33:12 AM » |
|
படம்: மூடுபனி இசை: இளையராஜா பாடியவர்: KJ ஜேசுதாஸ் வரிகள்: கங்கை அமரன்
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் .... தொடருதே தினம் தினம் .... (என் இனிய..)
பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே..... (என் இனிய..)
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே... (என் இனிய..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #55 on: February 15, 2012, 08:35:15 AM » |
|
நிலவை கொண்டு வா - வாலி
FM : நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
M : நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
FM : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
M : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
FM : இன்று முதல் இரவு…. M : இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு.. (2) மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா
M : வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா FM : அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில் பொதுவா நீ பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது.. M : இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது FM : மெல்ல இடையினை தொடுவாயா மெல்ல உடையினை களைவாயா நான் வெடிக்கையில் துடிக்கையில் முத்தங்கள் தருவாயா M : போதுமா …. அது போதுமா.. ஆசை தீருமா… அம்மா ஆ.
FM : மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா M : காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே FM : இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா M : அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா FM : தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால் அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா… M : இன்பமா……. பேரின்பமா….. அது வேண்டுமா ….. அம்மா..ஆ
FM : நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
M : நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
FM : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
M : காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
FM : இன்று முதல் இரவு…. M : இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு.. (2) மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா(2)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #56 on: February 15, 2012, 08:38:11 AM » |
|
திரைப்படம்: ஆஹா எத்தனை அழகு பாடல்: ஆஹா நிலவிலே நிலவிலே பாடகர்கள்: ஸ்வர்ணலதா, உதித் நாராயண் இசை: வித்யாசாகர்
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது தொடாமலே தொடாமலே என் கண்கள் உன்னை மெய்ந்தது படாமலே படாமலே உன் பெண்மை என்மெல் பாய்ந்தது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது
உன்னக்காக மயங்க பிடிக்கும் உன்னகாக கிறன்க பிடிக்கும் என்னகாகே நீ ஏங்கிடும் நெரங்களை ரசிக்க பிடிக்கும் உன்னகாக விழிக்க பிடிக்கும் உன்னோடு உறங்க பிடிக்கும் எனக்காக நீ வாங்கிடும் ஆடைகளில் கசங்க பிடிக்கும் உறங்காத இரவையும் மடிது காதல் கையில் தருவோம வருங்கால பகலை கோடுது வசந்த காலம் பெறுவோம பெறாமலே.....பெறாமலே.....ஹொய் பெறாமலே பெறாமலே என் நெஞ்சில் இன்பம் பாய்ந்தது
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டஸ்
முடியாத இளமை பிடிக்கும் குறையாத அழகை பிடிக்கும் மழை தூறும் நேரங்களில் ஆசைகளை நனைக்க பிடிக்கும் விடியாத கிழக்கும் பிடிக்கும் விலகாத நெருக்கம் பிடிக்கும் திசையாவும் நீயாகிடும் டெசங்களில் வசிக்க பிடிக்கும் பதினாறு வயதை எடுது பருவ கவிதை சொல்வாயோ இது போல கவிதை பேசி தனியே விட்டு செல்வாயா தராமலே... தராமலே... ஹொய் தராமலே தராமலே பொய் கோபம் என்னில் பூதது
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது தொடாமெஸ் தொடாமலே என் கண்கள் உன்னை மெய்ந்தது படாமலே படாமலே உன் பெண்மை என்மெல் பாய்ந்தது நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நெரில் பார்த்தது கனாவிலே கனவிலே என் ஆசை மெடை போட்டது
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #57 on: February 15, 2012, 08:40:11 AM » |
|
இசை: ஏ எம். ராஜா நடிப்பு: ஜெமினி, வைஜயந்திமாலா
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காஅல் ஜாடை பேசுது
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர் முடிப்போம் மணம் பெறுவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் கானம் பாடுவோம்
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #58 on: February 15, 2012, 08:41:20 AM » |
|
திரைப்படம்: மிஸ்ஸியம்மா பாடல்: வாராயோ வெண்ணிலவே பாடகர்கள்: AM. ராஜா, P. லீலா இசை: பழையது பாடல் ஆசிரியர்: T.N. Ramiah Das
வாராயோ வென்னிலாவே கேலாயோ எங்கல் கதையே வாராயோ வென்னிலாவே
(வாராயோ)
அகம்பாவம் கொண்ட சதியால் அரிவால் உயர்ந்திடும் பதினான் (2) சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
(வாராயோ)
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதினான் (2) நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெலி வேஷம்
(வாராயோ)
தன்பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது (2) தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது
(வாராயோ)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #59 on: February 15, 2012, 08:42:48 AM » |
|
திரைப்படம்: கர்ணன் பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே
|
|
|
|
|
Logged
|
|
|
|
|